நாளிதழ்–தினமணிதேதி – 20.06.2012
ராகுல் காந்தியின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டிபரிசளிப்பு விழா
திருத்தனிஜூன்
20 ராகுல் காந்தியின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு திருத்தணி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்புவிழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
ராகுல் காந்தி பிறந்தநாள் முன்னிட்டு திருத்தணியில் நடைபெற்று வந்த 3 நாள் கிரிக்கெட்போட்டியில் 16அணிகள் கலந்துகொண்டன. இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை புளுஸ்டார் அணியும், 11வதுடைகர் அணியும் மோதின. இதில் முதல்பரிசை புளுஸ்டார் அணி தட்டிசென்றது.
நிகழ்ச்சியில் திருத்தணி பிரதிநிதி கே. நிர்மல்குமார் பட்டாபிராமபுரம் ஊராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜனார்தனன் ஆகியோர் வரவேற்றனர்.
திருத்தணி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி. தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத்தலைவர் குப்பன், செயலர் எஸ். ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அ. ராஜேஷ் கலந்துகொண்டார்.
கிரிக்கெட் போட்டியில் முதல் இடத்தை பிடித்த புளுஸ்டார் அணிக்கு ரு.5 ஆயிரம் பரிசும், இரண்டாவது இடத்தை பிடித்த 11வதுடைகர் அணிக்கு ரு.2ஆயிரத்து 501 வழங்கி பாராட்டினார் . நிகழ்ச்சியில், திருத்தணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலர் ஆர். கோவிந்தராஜ், பிரதிநிதிசாமி, ஜி. உமாபதி, எம். டெல்லிபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். கே. லட்சுமிகாந்த் நன்றி கூறினார்.
|