நாளிதழ்– தினமதி , தேதி – 23.05.2012
திருத்தணி நூற்றுக்கணக்கான இளைஞர் காங்கிரஸார் ரத்ததானம்
திருத்தணி, மே.22 – ராஜிவ்காந்தி நினைவு தினத்தையொட்டி திருத்தணியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரசார் ரத்த்தானம் செய்தனர்.
திருத்தணியில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி திருத்தணி இளைஞர் காங்கிரஸ் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கோகுல தலைமை தாங்கினார். தொகுதி பிரதிநிதி நாரயணசாமி வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். மேலும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதிமொழியையும் ஏற்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்துக்கொண்டு ரத்ததானம் செய்தனர்.
இதில் மாவட்ட செயலாளர் திருமலை,தியாகராஜன்,நிர்மல் உள்ளிட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். |