நாளிதழ் - தேதி -
நாசே தொழிற்பயிற்சி மையம் திறப்பு
திருவள்ளுர் மாவட்டம் பள்ளிப்பட்டு வாணியர் தெருவில் நாசேகிராமப்புற இலவச தொழிற்பயிற்சி மைய தொடக்கவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாசே துணைத்தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். தன்னார்வளர் பத்ருன்நிஷா அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன்,நாராயணசாமி,கணேசன், முன்னாள் ஒன்றிய குழுதலைவர் வெங்கடராஜூ, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புருஷோத்தம ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர்கள், இளம்பெண்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர், தையல் எம்ராய்டரி, டி.வி. மற்றும் ரேடியோ மெக்கானிசம், எலக்ட்ரிகல் ஒயரிங், செல்போன் மெக்கானிசம் ஆகிய பயிற்சிகள் இலவசமாக கற்றுத்தரப்படும் என்று நாசே துணைத்தலைவர் ராஜேஷ் தெரிவித்தார்.
|