நாளிதழ் – தேதி – 07.02.2012
திருத்தணியில் நடந்த
வேலை வாய்ப்பு முகாமில் 7,239 பேருக்கு வேலை
இளைஞர் காங்கிரஸ் சார்பில் நாசே.ராஜேஷ்ஏற்பாடு
சென்னைபிப்.7, திருத்தணியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நாசே. ராஜேஷ் நடத்திய வேலை வாய்ப்பு முகாமில் 7,239 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருத்தணிநகரில் கெங்குசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அரக்கோணம் பாராளுமன்றதொகுதி இளைஞர் காங்கிரஸ்தலைவரும் அமெட்கடல் சார்பல்கலைக்கழக இணைவேந்தருமான நாசேஆர்.ராஜேஷ். தலைமையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஹண்டாய்மோட்டார்ஸ், நோக்கியா,ஜான்சன்லிப்ட்ஸ், டெல், சுந்தரம் ஆட்டோகாம்பணட்ஸ், ரானே இன்ஜின் வால்வ்ஸ், இந்துஜா பவுண்டேஷன். மைக்ரோ பவாகண்ட்ரோல்ஸ், ஓட்டல் கிரின்பார்க், டாடா ஜான்சன் கண்ட்ரோல்ஸ், பவர்கீயிர், மைக்ரான்எலக்ரானிக்ஸ், டி.வி.எஸ். , லாஜிஸ்டிக்ஸ், கோத்தாரிஇண்டஸ்ட்ரீஸ், காபிடேஎக்ஸ்பிரஸ், டெக்ஸ்ஸில், ஆக்சில்இந்தியா, அரினாஷ், அடிசன், விப்ரோ, டி.வி.எஸ்சுந்தரம், ரானேமெட்ராஸ்போன்ற 122 தொழில்நிறுவனங்கள் நேர்கானலில் பங்கேற்றனர்.
ஒவ்வொரு நிருவனத்திற்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு நேர்காணல் நடைப்பெற்றது. 10-ம்வகுப்பு முதல் மேல் படிப்பு வரைபடித்த 18,549 பேர் இந்த முகாமில் கலந்து கொண்டனர். முகாம் நடைபெறும் பள்ளிக்கு எதிரில் பந்தல் அமைக்கப்பட்டு நேர்காணலில் கலந்து கொண்டவர்களுக்கு வரிசை எண் அளிக்கப்பட்டு ஒவ்வொருவரும் எந்தஅறைக்கு நேர்காணலுக்கு செல்ல வேண்டும் என முறைப்படுத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேர்காணலில் வெற்றி பெற்ற 7,239பருக்கு மேடையிலேயே தனி நியமன ஆனண வழங்கப்பட்டது.
வரவேற்பு
இந்த நிகழ்ச்சியை அகிலஇந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியவர்த்சிங் குத்து விளக்கேற்றி துடங்கிவைத்தார். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.யுவராஜா நேர்காணல் கையேட்டை வெளியிட்டார். நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட முதல் நபருக்கு நாசே தன்னார்வ தொண்டுநிறுவன தலைவர் நாசேஜே. ராமச்சந்திரன் பணிநியமன ஆணையை வழங்கினார்.
முதல் பணி நியமன ஆணை பெற்றவர் மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது
நாளிதழ் –தேதி –
விருகம்பாக்க்ம் தொகுதி 129-வது வட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா சாலிகிராமம் காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. வட்டதலைவர் கன்னியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சைதைரவி, அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் தலைவர் நாசேஆர்.ராஜேஷ் முன்னாள் மாவட்டத்தலைவர்கள் முனவர் பாஷாஇலபாஸ்கர் மற்றும்மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.கே. ராம்குமார், அன்னை ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் மற்றும் ஏழைகளுக்கு வேட்டி – சேலைகள் வழங்கப்பட்டது
|